tholaiththavan

Sunday, May 24, 2009

சோனி பிரவோ 40" டீவி வாங்கியாச்சு...

ஞாயிற்றுக்கிழமை கலையில பெஸ்ட் பய்ல சோனி பிராவோ 40'' டிவி உம் Blu ray player உம் சேர்த்து 950$ போட்டு இருந்தாங்க .லன்ச்சை முடிச்சிட்டு நான்,சதீஷ் ,சத்யாவும் பெஸ்ட் பய்க்கு போனோம் .டிவி உம் ,பளு ரே பிளேயரையும் ,பேட்மேன் - டார்க் நைட் புளு ரே டிஸ்க்கும் செலக்ட் பண்ணி பில் போட்டோம். சீனியும் பெஸ்ட் பய்க்கு வந்தார்.



அப்புறம் 10% offer வேற வாங்கி டாக்ஸ் எல்லாம் சேர்த்து 1075$ ஆகிடுச்சி. சீனியோட வேன்ல டிவிய லோட் பண்ணி வீட்டுக்கு கொண்டு வந்தோம். தற்காலிகமா டிவிய கம்ப்யூட்டர் டேபிள்ள செட் பண்ணிட்டு ப்ளுரேல முதல்ல கார்ஸ் படத்த போட்டோம். சான்சே இல்ல படம் அவ்வளவு சூபெர்பா இருந்தது. கொஞ்ச நேரம் பார்த்துட்டு அயங்கரன் டிவிடி ,மத்த இங்கிலீஷ் பட டிவிடி எல்லாம் போட்டு பார்த்தோம் .கடைசியில நானும் 40'' டிவி பேமிலியில ஜாஇன் பண்ணிட்டேன்.

சதீஷ் லிட்டில் ராக் வந்தாச்சு...

சதீஷ் லிட்டில் ராக்குக்கு கடைசியில இந்த மே லாங் வீக் எண்டுக்கு வர்றதுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டான். கடந்த 3 வருசமா போட்ட பிளான் இப்பத்தான் வொர்க் அவுட் ஆனது.

வெள்ளிக் கிழமை (மே 22) நைட் மீனாட்சி வீட்டுல டின்னரை முடிச்சுட்டு அயன் படத்தை பார்க்க ஆரம்பிச்சோம். நான் படம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே தூங்கிட்டேன். சீனி கோபிநாதன் பேமிலி, மீனாட்சி பேமிலி, சத்யா எல்லோரும் முழு படத்தையும் பார்த்து முடிக்க காலை 3:30 மணி ஆயிடுச்சு.
காலை 8:30 மணிக்கு எழுந்து குய்க் ப்றேக்பாச்ட்டை முடிச்சுட்டு சத்யாவும் நானும் வீட்டுக்கு வந்து ரெடியாகிட்டு ஏர்போர்ட்டுக்கு சதீஷை பிக்கப் பண்ண போனோம். நாங்க போறதுக்குள்ள அவனோட ப்ளைட் லேண்ட் ஆகி ,ஏர்போர்ட் விட்டு வெளிய வந்துட்டான்.

சதீசை கடைசியா போன வருஷம் அம்மா வந்தப்ப பார்த்தது. அவனை பிக்கப் பண்ணிட்டு வீட்டுக்கு வந்தோம். சத்யா சிக்கன் குழம்பு ,fish fry பண்ணி கலக்கிட்டாள்.மீனாட்சி ,சீனி பேமிலியையும் சாப்பிட கூப்பிட்டுருந்தோம். லஞ்ச முடிச்சிட்டு சதீஷ் ரெஸ்ட் எடுக்க தூங்க போயிட்டான்.ஈவினிங் மீனாட்சி வீட்டுக்கு போனோம். அங்க ஜாலியா பேசிட்டு இருந்தோம்.

ஞாயிற்றுக்கிழமை கலையில கல்யாண reception போட்டோவை பார்த்தோம். சரியான மழை. எங்கேயும் வெளியில போகல. பெஸ்ட் பய்ல சோனி பிராவோ 40'' டிவி வாங்கிட்டு வந்தோம்.(அத பத்தி அடுத்த ப்ளாக்ல முழுசா பார்க்கலாம் ).

நைட் சுஜாதா மீன் குழம்பு பண்ணி எங்களை சாப்பிட கூப்பிட்டாங்க. டின்னர முடிசிட்டு பேசிட்டு வீட்டுக்கு வர மணி 11:30 ஆனது. திங்கட்கிழமை காலைல எழுந்து டிபனை முடிசிட்டு சதீஷ் ஊருக்கு கிளம்பிட்டான்.

சதீசை எங்கேயும் கூப்பிட்டுட்டு போயி சுத்தி காமிக்கல. லாங் வீகென்ட் புல்லா மழை வந்ததால வீட்டுலையே இருக்க வேண்டியதாயிடுச்சி. தெரியல சதீஷ் எந்த அளவுக்கு என்ஜாய் பண்ணினான்னு. அடுத்த தடவை லிட்டில் ராக்க்குக்கு அவன் வரும் போது எல்லா இடத்தையும் சுத்தி காமிக்கணும்.

Wednesday, May 20, 2009

நிம்மதியான வாழ்வைக்கொடு...

என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எதை நம்புவது என்றும் தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் நிகழ்வைப் பற்றி பலவிதமான கருத்துக்கள். ஆம் , நான் தனி ஈழத்திற்க்கு போரடிய பிரபாகரனின் மரணத்தை பற்றி தான் செல்கிறேன்.

அவர் இறந்து விட்டார் என்றும், இல்லை என்றும் பல செய்திகள். இது உண்மையாக இருந்தால் தமிழ் இனத்திற்க்காக போராடிய அவருக்கு வீரவணக்கங்கள். ஒரு நல்ல தமிழனை இனம் இழந்து விட்டது. பிரபாகரன் மரணம் அடையலாம், ஆனால் அவர் தமிழரின் உரிமைக்காக நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்க்கும். கடந்த 30 வருடங்களாக,தங்கள் உரிமைக்காக போராடி தன் இன்னுயிரை நீத்த அனைத்து மக்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலி.

நான் இறைவனிடம் வேண்டுவது எல்லாம், இறைவா! என் இன தமிழருக்கு நல்ல எதிர்காலத்தை கொடு.... பட்ட துன்பம் போதும்.... சொந்த நாட்டிலே அகதியாக வாழும் நிலையை மாற்று... அனைவருக்கும் நிம்மதியான, சம உரிமையோடு வாமும் வாழ்வைக்கொடு...

Sunday, May 17, 2009

பிரமாண்டமான ரிசப்சன் கொண்டாட்டம் - பாகம் - 5

பிரமாண்டமான ரிசப்சன் கொண்டாட்டம் - பாகம் - 4

பிரமாண்டமான ரிசப்சன் கொண்டாட்டம் - பாகம் - 3

பிரமாண்டமான ரிசப்சன் கொண்டாட்டம் - பாகம் - 2

பிரமாண்டமான ரிசப்சன் கொண்டாட்டம்.

Friday, May 15, 2009

ரிசப்சன்... இன்னும் ஒரு நாளில்...

கடைசி ரெண்டு நாளா, சத்யாவை மேகலா வீட்டுல விட்டுட்டு நான் ஆபீஸ்க்கு போயிட்டு இருக்கேன். எங்களோட ரிசப்சன்னுக்காக சத்யாவுக்கு மேக்கப், டிரஸ் செக்கிங்ன்னு படு பிஸியா போகுது. ரெண்டு நாளா, நான் தூங்குறதுக்கு நைட் 2 மணி ஆயிடுது. முதல்ல ரிசப்சன் வேலைய பின்னாடி வர்ற டீமா பிரிச்சிட்டு நம்ம பிரண்ட்ஸ எல்லாத்தையும் ஓர்க்கை எடுத்துக்க சொல்லிட்டேன். அவங்களும் அவங்க வீட்டு பங்சன் மாதிரி எல்லாரும் முழு ஈடுபாடோட வேலை பார்க்கிறாங்க...

S.No Team
1 Entrance Reception Team
2 Decoration Team
3 Food Team
4 Camera Team
5 Video Team
6 Cultural Team
7 Food Accessories Purchase Team
8 Projector - Digital - Team
9 Cake order and Pickup Team
10 Thanks Team

மற்ற விபரங்கள் அடுத்த பதிவில்....

Tuesday, May 12, 2009

ரிசப்சனுக்கு ரெடியாகிட்டு இருக்கோம்...

இது எங்களுக்கு ஒரு பிஸியான வாரம். ஆமாங்க, சத்யாவும், நானும் மும்முரமாக எங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறோம். போன ஞாயித்து கிழமை உலகா குடும்பத்தாரும், ஆனி, சத்யா, நானும் சேர்ந்து டில்லட்ஸுக்கு போயி சத்யாவுக்கு தேவையான, மேக்கப் செக்கப்பும் பிறகு, கிட்சை வாங்கினோம்.

அப்புறம் நேரா ப்ர்லிங்க்டன், வால்மார்ட், பார்ட்டி சிட்டி கடைக்கு போயி ரிசப்சனுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்க்கு வர மதியம் 3:30 ஆனது. ரம்யா குடுத்த பிரியாணியை ஆனியும், நாங்களும் சாப்பிட்டோம்.
அதுக்கு அப்புறம் ரிசப்சன் ஈவைட் அனுப்புறதுக்கு தயாராகி, எல்லா இன்பர்மேசனும் ரெடி செஞ்சி ஈவைட் அனுப்ப பகல் 2:30 ஆனது. யாப்பா.. துக்கம் கண்ண கட்டுதே...
அப்புறம் நேத்து (திங்கட்கிழமை) சாப்பாடு விசயமா சுஜாதா, மேகலாகிட்ட பேசினோம். மெனுல என்ன கடையில ஆர்டர் பண்ணனும் முடிவும் பண்ணிணோம்.

இன்னைக்கு மதியம் உலகா, சீனி, நானும் மிக்கீஸில் ரிசப்சனுக்கு தேவையான கேக்கை நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஆர்டர் செய்தோம். ஒரே பிஸி தான் போங்க... இன்னும் நடுவுல 3 நாளு தான் இருக்கு. நண்பர்கள் உதவியோட நல்ல படியா பங்சன் நடக்கும்ன்னு நம்பிக்கையோட மே 16ம் தேதியை நெருங்கிட்டு இருக்கோம்...

Sunday, May 03, 2009

அப்பாவுக்கு சாமி கும்பிட்டோம்...

அப்பா எங்களை விட்டு பிரிந்து இன்றோடு நான்காம் ஆண்டுகள் ஆகிறது. காலையிலே எழுந்து குளித்து நேரா கிளம்பி ரோட்ணி பரம்ல இருக்கிற குரோகர்க்கு போனேன். அங்கே அப்பா பூஜைக்கு தேவையான பூங்கொத்தை வாங்கிக்கொண்டு வந்தேன். சத்யா அதை மாலையாக கட்டினாள். காலை 10:30 மணிக்கு மேல் அப்பாவின் படத்தை எடுத்து நன்றாக துடைத்து புதிதாக திருநீறு, குங்குமம் இட்டு மாலை போட்டு அப்பாவை வணங்கிணோம். பிறகு சத்யா மதிய உணவு தயார் செய்ய ஆரம்பித்தாள். சாப்பாடு, சாம்பார், ரசம், முட்டைகோஸ் பொரியல், உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம், பாயாசம் என உணவு தயாரானவுடன், எதிர் வீட்டு சீனி, சுஜாதா குடும்பத்துடன் உணவு உண்டோம். கடந்த வருட பூஜையில் அம்மா எல்லாவற்றையும் முன்னால் இருந்து செய்தார்கள். பூஜை முடிந்த பிறகு அம்மாவுக்கு போன் செய்து பேசினோம்.

கரை(மறை)ந்து போன நீங்கள்...

"அப்பா" என்ற மூன்றெழுத்து
மந்திரச்சொல்லை சொல்லும் போது
எனக்கு நீங்கள் செய்த
தியாகம் தான் ஞாபகம் வருகிறது.


ஆம், நம் குடும்பம் பிரகாசமாக
இருக்க வேண்டும் என்று
மெழுகுவர்த்தியாய் மாறி,
எங்களின் வாழ்க்கையில் ஒளி
தந்து கரை(மறை)ந்து போனவர் தானே நீங்கள்...

எனக்கு வாழ்க்கையயை
வாழ கற்று கொடுத்து
நான் வளர்ந்து திரும்பி பார்க்கும் போது
நீங்கள் இல்லாமல் இருப்பதை
புரிந்தும் புரியாமல்
வாழும் உங்கள் மகன்....

நான்காம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி...

எங்கள் தெய்வம் எங்களை விட்டு பிரிந்து
இன்றோடு நான்கு ஆண்டு ஆகிறது.
அவருக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி...
- உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்.