tholaiththavan

Wednesday, May 30, 2007

சந்தோச பயணம் - 3



ஒவ்வொரு மனுசனுக்கும் வாழ்க்கை ஆரம்பிக்கிற அற்புதமான இடம் தான் பள்ளிகூடம்.

'அ' சொல்லி கொடுக்கிறதுல இருந்து நல்ல நண்பர்களை அடையாளம் காட்டி, குழந்தைக்கே உரிய வெகுளிதணமும், கள்ளம் கபடம் இல்லாமல், ஒரு கவலையும் இல்லாமல் வாழ்ந்து, என்னை வளர்த்து தான் தேவாங்கர் நடு நிலை, மேல் நிலை பள்ளிகள்.

நான் schoolக்கு போயி பல வருசம் ஆச்சி. இந்த முறை கண்டிப்பா schoolக்கு உள்ளே போகணும்னு leave நாளான சனிகிழமை நானும், என் friend சரவணனும் போணோம். நான் படிக்கும் போது(1993,1994) எனக்கு கணக்கு பாடம் எடுத்த திரு.ராதா கிருஷ்ணன் தான் இப்போ எங்க school தலைமை ஆசிரியர். அவர் பசங்களுக்கு class எடுத்துகிட்டு இருந்தார். அவரிடம் பேசி classஐ தொந்தரவு பண்ண வேணாம்ன்னு நான் படித்த ஒவ்வொரு வகுப்பறைதேடி என் கால்கள் நடந்தன.

8வது வகுப்பறைஐ பார்க்கும் போது கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்லமல் வகுப்பறை வாசலில் முட்டி போட்டது, பசங்களோடு சேர்ந்து போட்ட ஆட்டம் எல்லாம் என் ஞாபகம் வந்தது.

வீட்டுக்கு கிளம்பும் போது எத்தனையோ மாணவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தி விட்டு பிரமாண்டமாய் நிற்கும் என் பள்ளிகூடத்தை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்தேன்.

இதயம் கனத்தது....

கண்கள் ஆனந்தத்தில் பனித்தது....
Infront of school prayer hall:

எங்க School Ground:

நான் படித்த 8ம் வகுப்பு:

School வாசலில் விளையாடிகொண்டு இருந்த பசங்க:

லாஸ் வேகஸ், லாஸ் ஏஞ்சலஸ் போணோம்




போன திங்கள் கிழமை மெமோரியல் டேக்கு லீவு விட்டாங்களா. நாங்க(நான்,சுவாமி,பேட்ரிக்,சீனி) லாஸ் வேகஸ், லாஸ் ஏஞ்சலஸ் போணோங்க...







Monday, May 21, 2007

தலைவரும்,கார்த்தி மாப்ளேயும்




இது எப்டி இருக்கு?

சந்தோச பயணம் - 2



நான் 9ம் வகுப்பு படிக்கும் போது எங்களோட குலதெய்வ கோவிலுக்கு போனேங்க...13 வருசத்துக்கு அப்புறம் இப்பத்தான் என் குடும்பத்தோடு மறுபடியும் போக கூடிய் வாய்ப்பு கிடைச்சது.

அருப்புக்கோட்டையில இருந்து 13 கிலோ மிட்டர்ல இருக்கு குல்லூர் சந்தை. அங்கே தான் எங்க குலதெய்வம் சவுண்டம்மன் வாழ்றாங்க.

ரெம்பா வருசத்துக்கு அப்புறம் மனசு குளிர ஆண்டவனை குடும்பத்தோட வேண்டியது அவ்வளவு சந்தோசமா இருந்தது...

பயணம் தொடரும்...

Friday, May 18, 2007

இது கல்லூரி அல்ல, நாம் வாழ்ந்த வீடு...

இது கல்லூரி அல்ல, நாம் வாழ்ந்த வீடு

கர்ப்பத்தின் நாட்களில்
கல்லூரி நாட்களில்
காயங்கள் இல்லையே...
சோகங்கள் இல்லையே...

இது போல தினம் வாழ மனம் ஏங்குதே!!!
சுகமான கனவானதே???

Thursday, May 03, 2007

Gone...

Gone...
But not forgotten...

I know you are with me in sprit.
But Still I miss u...

ஏனோ?

இரண்டு வருடம்...
ஆம் அப்பா
இன்றோடு நீங்கள்
எங்களை விட்டு பிரிந்து
இரண்டு ஆகிறது.
எங்கள் வாழ்க்கையும்
அச்சாணி இல்லாத
தேரைப்போல
உங்கள் நினைவு என்ற
உந்து சக்தியால்
ஒடிக்கொண்டு இருக்கிறது.

அறுவடைக்கு
காத்திருக்கும் போது
புயல் வந்தது போலத்தான்
என்னுடய நிலையும்...
உழைப்பு மட்டுமே செய்து வந்த
உங்களுக்கு ஒய்வு கொடுக்க
நான் நினைக்க...
ஆண்டவண் உங்களுக்கு
நிரந்தர ஒய்வு கொடுத்ததேனோ?

இரண்டாம் ஆண்டு அஞ்சலி....


மண்ணுலகம் விட்டு
விண்ணுலகம் சென்ற
எங்கள் தெய்வத்திற்கு எங்களுடைய
இரண்டாம் ஆண்டு அஞ்சலி....

Wednesday, May 02, 2007

நினைவு

நினைவு