tholaiththavan

Tuesday, February 21, 2006

இடைவெளி


வெவ்வேறு வயதில் எப்படி மகனும்/மகளும் தன் தந்தையை பற்றி நினைக்கிறார்கள்?

ஏதாவது தவறு இருந்தால், மன்னிக்க...

4 வயதில் - எங்கப்பா Great தெரியும்ல.

6 வயதில் - எங்கப்பாவுக்கு எல்லாம் தெரியும் டா.
10 வயதில் - எங்கப்பா நல்லவரு. ஆனா கொஞ்சம் கோவபடுறாரு.
12 வயதில் - எங்கப்பா ரெம்ப பாசமா இருந்தாரு எப்போ நான் சின்ன
புள்ளையா இருக்கும் போது.
14 வயதில் - எங்கப்பாவை வரவர புரிஞ்சிக்கவே முடியலயே?.
16 வயதில் - எங்கப்பாவுக்கு புதுசு எதுவுமே புரிய மாட்டேன்கிறதே.
18 வயதில் - எங்கப்பாவோட தொல்லை தாங்க முடியலப்பா.
20 வயதில் - அய்யயோ... இவரோட நம்மாள ஒரு நாளே இருக்க
முடியலயே? எப்படி இத்தனை வருசமா அம்ம இவரோட
இருக்காங்க?
25 வயதில் - அப்பா ஏன் எல்லாத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்?
30 வயதில் - என் பையனை பாத்துகிறது இவ்வளவு கஷ்டமா

இருக்கே. நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது என்னை
பாத்துகிறதுக்கு என் அப்பாவை இவ்வளவு கஷ்டபடுத்தி
இருப்பேனா?
40 வயதில் - நான் என்ன தப்பு பண்ணினாலும், அப்பா என்னை நல்ல

ஒழுக்கதோட தான் வளர்த்து இருக்காரு.
45 வயதில் - நான் யோசிக்கிறேன்? நம்மள எப்படி இந்த அளவுக்கு

உயர்த்தினார்?
50 வயதில் - ஹும்.. நம்மாள ஒரு பிள்ளையவே பார்த்துக்க முடியலயே

எப்படி நம்ம அப்பா என் தங்கச்சி/அக்காவை எல்லாம்
பார்த்து வளர்த்தார்.
55 வயதில் - எங்கப்பா. நல்லா யோசிச்சி எங்களுக்காக நிறைய பண்ணி
இருக்காரு. அவரு ஒரு அறிவாளிய்யா..

60 வயதில் - எங்கப்பா Great தெரியும்ல.

அப்பாவை பற்றி புரிந்து உண்மையை அறிய நமக்கு 56 வருட இடைவெளி தேவைபடுகிறது....

Wednesday, February 15, 2006

நினைவலை - 1


முதல் படம்:

நான் படம் பார்க்க வேண்டும் என்பதற்க்காக
நமது ஊர் எல்லையில் உள்ள
மகாராணி தியேட்டருக்கு
என்னை சைக்கிளில் எற்றி கொண்டு
4 கிலோ மீட்டர் தூரம்
கால் வலிக்க மிதித்து சென்று,
டிக்கெட் வாங்க போன
உங்களுக்கு கிடைத்தது
தியேட்டர் "House Fullங்க" என்ற பதில்....

நான் வருத்தபடக்கூடாதே என்பதற்காக...
உக்கருடா மவனே என்று...
எனக்காக அங்கிருந்து
ஊரின் மறு முனையில் உள்ள
தமிழ்மணி தியேட்டருக்கு
அழைத்து சென்று என்னை
மலையூர் மம்பட்டியன் படம்
பார்க்க வைத்து நான்
சிரித்ததை பார்த்து ரசித்திரே !!!!

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறாதா அப்பா...

Sunday, February 05, 2006

வா... வா... ஜி... சிவாஜி...

சிறு வயதில் இருந்தே எனக்கு "ரஜினி" என்ற காந்தத்தின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக செய்யப்பட்ட சிறு முயற்சி...



இந்த Photoவை எடுத்து & மேலே உள்ள Photoவை மாற்றி கொடுத்த என் நண்பன் சுவாமி நாதனுக்கு நன்றி.


சரி... வந்தது வந்துடீங்க... உங்க commentsஐ இங்க சொல்லிட்டு போங்க.

பொங்கல் விழா கொண்டாட்டம் - 2006



ஏன்னடா இவன் பொங்கல் முடிந்து 20 நாளுக்கு அப்புறம் அதை பத்தி எழுதுறானேன்னு பார்க்கிறீங்களா... கொஞ்சம் வேலை அதான் இந்த இடைவெளி. சரி... விசயத்துக்கு வருவோம்.

தமிழர்களின் தனிப்பெரும் விழாவான பொங்கல் விழாவை Little Rockல இருக்கிற Highland Valley United Methodist Churchல Jan 15 2006 அன்று கொண்டாடிணோம். Function மகா நதி படத்தில் இருந்து "பொங்கலோ பொங்கல்" பாட்டில் இருந்து ஆரம்பம் ஆனது.

பாலாஜி பையன் ஒரு இங்லிஷ் பாட்டு, பாலு அண்ணன் பொண்ணு சயோனிகா ஒரு தமிழ் பாட்டு, நிவேதிதா+ வேதுவும் சேர்ந்து "ரண்டக்க ரண்டக்க" பாட்டுக்கு டான்ஸ், மிராக்குலின்+ராகுல்+அவினாஸும் சேர்ந்து சச்சின் படத்துல இருந்து "வாடி வாடி ..." பாட்டுக்கு டான்ஸ், அதித்தி+ஸ்ரீம் சேர்ந்து "சினா தானா" பாட்டுக்கு டான்ஸ், அப்புறம் டாக்டர் உதயும் அவர் பையன் ராஜ்குமாரும் சேர்ந்து கீ போர்டு என குழந்தைகள் கலக்கி விட்டனர்.

இப்போ பெரியவங்க turn...

நிஷா, நமது பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் ஆடினார்.

Little Rock ல் குயில் குரலுக்கு சொந்தகாரரான மீனாட்சி சுந்தரம் "தங்க தாமரை மகளே..." பாடல் பாடினார்.

சிவகாசி படத்துல இருந்து "கோடம்பாக்கம் ஏரியா" பாட்டுக்கு ரம்யா, மஞ்ஜுளா, கோமதியும் சேர்ந்து Little Rock ஏரியாவையே ஆட்டம் காண வைத்தனர்.

பிறகு மீனாட்சி,உலக நாதன், பாலாஜி,டாக்டர் உதய் & கோவிந்தராஜன் ஆகிய 5 familyம் சேர்ந்து 10 mins டான்ஸ் ஆடி நிகழ்ச்சியை களை கட்ட வைத்தார்கள்.

"LAST BUT NOT LEAST...." எங்க ப்ரொக்ரம்க்கு ஒரு Buildup தான்.:)

இது வரை பல நாடகம் நடித்த நாங்கள் இந்த முறை பட்டி மன்றம் நடத்தினோம். தலைப்பு: "மகிழ்ச்சி என்பது திருமணத்திற்கு முன்பா? இல்லை திருமணத்திற்கு பின்பா?. நடுவர்: உலக நாதன். திருமணத்திற்கு பின்பே என்ற அணியில் ராம சந்திரன், நான், சுவாமி நாதன். திருமணத்திற்கு முன்பே என்ற அணியில் இப்ராகிம்,மீனாட்சி, பாலாஜி. இதில் விசேசம் என்னவென்றால் திருமணமாகாத நாங்கள் பின்பே என்றும், திருமணனாவர்கள் முன்பே என்றும் பேசினோம். மிக அருமையாக சென்ற பட்டி மன்றம், பல வாதங்களுக்கு பின் தாய்மார்களின் பேராதரவோடு எங்கள் அணி ஏகோபித்த வெற்றி பெற்றது. இந்த வித்தியாசமான முயற்சி அனைவராலும் பாரட்டபட்டது. இது எங்களுக்கு கிடைத்த வெற்றி..

.“போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு
புதுசா இப்ப பொறந்தோமின்னு எண்ணிக்கொள்ளடா”

“தை பொறக்கும் நாளை
விடியும் நல்ல வேளை”... என தலைவர் ரஜினிகாந்த் பாட, நான் பொங்களை அருப்புகோட்டையில் கொண்டாடிய ஞாபகம் என்னை தொட்டு சென்றது....