சோனி பிரவோ 40" டீவி வாங்கியாச்சு...





என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எதை நம்புவது என்றும் தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் நிகழ்வைப் பற்றி பலவிதமான கருத்துக்கள். ஆம் , நான் தனி ஈழத்திற்க்கு போரடிய பிரபாகரனின் மரணத்தை பற்றி தான் செல்கிறேன்.
அவர் இறந்து விட்டார் என்றும், இல்லை என்றும் பல செய்திகள். இது உண்மையாக இருந்தால் தமிழ் இனத்திற்க்காக போராடிய அவருக்கு வீரவணக்கங்கள். ஒரு நல்ல தமிழனை இனம் இழந்து விட்டது. பிரபாகரன் மரணம் அடையலாம், ஆனால் அவர் தமிழரின் உரிமைக்காக நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்க்கும். கடந்த 30 வருடங்களாக,தங்கள் உரிமைக்காக போராடி தன் இன்னுயிரை நீத்த அனைத்து மக்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலி.
நான் இறைவனிடம் வேண்டுவது எல்லாம், இறைவா! என் இன தமிழருக்கு நல்ல எதிர்காலத்தை கொடு.... பட்ட துன்பம் போதும்.... சொந்த நாட்டிலே அகதியாக வாழும் நிலையை மாற்று... அனைவருக்கும் நிம்மதியான, சம உரிமையோடு வாமும் வாழ்வைக்கொடு...
இது எங்களுக்கு ஒரு பிஸியான வாரம். ஆமாங்க, சத்யாவும், நானும் மும்முரமாக எங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறோம். போன ஞாயித்து கிழமை உலகா குடும்பத்தாரும், ஆனி, சத்யா, நானும் சேர்ந்து டில்லட்ஸுக்கு போயி சத்யாவுக்கு தேவையான, மேக்கப் செக்கப்பும் பிறகு, கிட்சை வாங்கினோம்.
அப்புறம் நேரா ப்ர்லிங்க்டன், வால்மார்ட், பார்ட்டி சிட்டி கடைக்கு போயி ரிசப்சனுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்க்கு வர மதியம் 3:30 ஆனது. ரம்யா குடுத்த பிரியாணியை ஆனியும், நாங்களும் சாப்பிட்டோம்.
அதுக்கு அப்புறம் ரிசப்சன் ஈவைட் அனுப்புறதுக்கு தயாராகி, எல்லா இன்பர்மேசனும் ரெடி செஞ்சி ஈவைட் அனுப்ப பகல் 2:30 ஆனது. யாப்பா.. துக்கம் கண்ண கட்டுதே...
அப்புறம் நேத்து (திங்கட்கிழமை) சாப்பாடு விசயமா சுஜாதா, மேகலாகிட்ட பேசினோம். மெனுல என்ன கடையில ஆர்டர் பண்ணனும் முடிவும் பண்ணிணோம்.
இன்னைக்கு மதியம் உலகா, சீனி, நானும் மிக்கீஸில் ரிசப்சனுக்கு தேவையான கேக்கை நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஆர்டர் செய்தோம். ஒரே பிஸி தான் போங்க... இன்னும் நடுவுல 3 நாளு தான் இருக்கு. நண்பர்கள் உதவியோட நல்ல படியா பங்சன் நடக்கும்ன்னு நம்பிக்கையோட மே 16ம் தேதியை நெருங்கிட்டு இருக்கோம்...
ஆம், நம் குடும்பம் பிரகாசமாக
இருக்க வேண்டும் என்று
மெழுகுவர்த்தியாய் மாறி,
எங்களின் வாழ்க்கையில் ஒளி
தந்து கரை(மறை)ந்து போனவர் தானே நீங்கள்...