tholaiththavan

Wednesday, February 15, 2006

நினைவலை - 1


முதல் படம்:

நான் படம் பார்க்க வேண்டும் என்பதற்க்காக
நமது ஊர் எல்லையில் உள்ள
மகாராணி தியேட்டருக்கு
என்னை சைக்கிளில் எற்றி கொண்டு
4 கிலோ மீட்டர் தூரம்
கால் வலிக்க மிதித்து சென்று,
டிக்கெட் வாங்க போன
உங்களுக்கு கிடைத்தது
தியேட்டர் "House Fullங்க" என்ற பதில்....

நான் வருத்தபடக்கூடாதே என்பதற்காக...
உக்கருடா மவனே என்று...
எனக்காக அங்கிருந்து
ஊரின் மறு முனையில் உள்ள
தமிழ்மணி தியேட்டருக்கு
அழைத்து சென்று என்னை
மலையூர் மம்பட்டியன் படம்
பார்க்க வைத்து நான்
சிரித்ததை பார்த்து ரசித்திரே !!!!

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறாதா அப்பா...

1 Comments:

  • Raj,
    Now a day your writing skill is growing like anything. You are writing even the small incidents in interesting and touching way. Your lines are simple, clean and sensitive.
    Keep Blogging Raj.

    By Blogger சுவாமி - Swami, at 2/16/2006 8:38 AM  

Post a Comment

<< Home