tholaiththavan

Thursday, January 01, 2009

Happy New Year 2009

புது வருடம்: - படித்ததில் பிடித்தது...

வாழ்துக்களுடன் தொடங்கி,
இரங்கலுடன் முடியும்
உன் வாழ்க்கை உன்னதமானது.

உன்னை வரவேற்கத்தான்
எத்துணை ஆரவாரம்,
மகிழ்ச்சிகள்,வாழ்த்துக்கள், கேளிக்கைகள்.



பிரம்மன் உனக்குஅளித்த
ஆயுட்காலம் 12 மாதங்கள்,
உலகத்தில் உன் வாழ்நாளை
முழுமை வாழ்வது நீ மட்டும் தான்.


நீ பிறக்கும்போதே, உனக்கான
கடைசி நாளும் எழுதப்பட்டுவிடுகிறது,
நீ என்ன எமனுக்கு அப்பாற்பட்டவனோ?

12 மாதங்களில் பல பருவ நிலைகளை
தரும் உன்னை ரசிக்காமல் என்ன செய்வது?


காலத்தேவனின் செல்லக்குழந்தை நீ,
யாருக்கும் காத்திறாமல்
காற்றோடு கரைந்து விடுகிறாய்.

உன்னை வைத்துத்தான் எங்களின் பிறந்தநாளும்
இறந்தநாளும் நினைவு கொள்ளப்படுகிறது,
எனவே, உன் ஒவ்வொரு நொடியும்
சுவாசிக்கபட வேண்டிய சொர்கம்.


எங்களோடு ஒன்றாக கலந்து விட்ட
உன்னை வரவேற்கிறோம்,
புத்தாண்டே வருக, வளங்கள் பல புரிக...

0 Comments:

Post a Comment

<< Home