tholaiththavan

Sunday, March 02, 2008

பிரிவோம்... சந்திப்போம்...


இப்போது தான் பிரிவோம் சந்திப்போம் படத்தை பார்த்தேன். வழக்கமான தமிழ் படத்தில் இருந்து ஒரு வித்தியாசமான படம். நடேசனாக சேரன், விசாலட்சியாக சினேகா நடித்து இல்லை கொஞ்சம் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

உடன்பிறந்தவர்கள், செந்தகாரர்கள் யாரும் இல்லாமல் வளரும் விசாலட்சி அதற்கு எதிர்மறையாக கூட்டு குடும்பமாக வளரும் நடேசன். இவர்களின் திருமணத்திற்க்கு பிறகு உறவினர் மத்தியில் மிகக்சந்தோசமாக இருக்கும் விசாலட்சிக்கு வில்லனாக வருகிறது நடேசனின் டிரான்ஸ்பர்.

செந்த பந்தங்களை விட்டு போக வேண்டிய நிலை. நடேசனோ செந்த பந்தங்களை விட்டு தன் மனைவியுடன் வாழ ஆசையுடன் அவளையும் அழைத்து கொண்டு புது இடத்திற்கு செல்கிறான். கணவன் வேலைக்கு சென்றப்பிறகு தனிமையில் நாளுக்கு நாள் உறவுகளின் பாசத்திற்கு ஏங்குகிறாள். அவளுடைய நடவடிக்கை நாளுக்கு நாள் மாறுவதை அந்த ஊரில் இருக்கும் டாக்டரின் உதவியுடன் கண்டு தன் செந்த பந்தங்களோடு இணைவது தான் கதை.

வேறுவழி இல்லாமல் உறவுகளை மறந்து பணத்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கும் இந்த உலத்தில் உறவுகள் இல்லாமல் தனிமையில் வாடும் கதையை எடுத்து எந்த ஒரு கவர்ச்சியில் சிக்காமல் அருமையான படைப்பை அளித்த இயக்குனர் திரு.கரு.பழனியப்பனுக்கு பாரட்டுக்கள்.

நடேசனுக்கும், விசாலட்சிக்கும் "ஒரு சொட்".

1 Comments:

  • 1950 il vandu irukka vendiya padam,indha kalathil entha pen puguntha vettarrodu irukka aasai padukiral? out dated!

    By Anonymous Anonymous, at 3/09/2008 11:56 PM  

Post a Comment

<< Home