tholaiththavan

Tuesday, November 04, 2008

இது அமெரிக்காவுக்கு புதிய விடியல்

நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் நம் காலத்தில் நிறைவேறியிருக்கின்றன. இது நம் ஜனநாயகத்தின் பலத்தை காட்டுகிறது. இப்போது வரலாற்றின் இதயத்தில் கையை வைத்துப் பார்த்தால் அதன் மகிழ்ச்சித் துடிப்பை நீ்ங்கள் உணர முடியும்.



என்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் இந்த நாட்டுக்கு ஆற்றிய கடமைகளை இந்த நேரத்தில் எளிதாக புறம்தள்ளிவிட முடியாது. எனக்கு சரியான போட்டி தந்தாலும் என்னுடன் தனிப்பட்ட முறையில் அன்பையும் பகிர்ந்த அவருக்கு என் நன்றிகள்.

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பிரச்சாரத்தை நாம் நடத்தினோம். இதற்காக கட்சியினருக்கும் எனக்குத் துணை நின்ற அமெரிக்க மக்களுக்கும் நன்றி. இந்த வெற்றி எனக்குரியதல்ல, இது அமெரிக்க மக்களின் வெற்றி.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்ட மாற்றம் வந்துவிட்டது. நமக்கு புதிய உத்வேகமும் பலமும் கிடைத்துள்ளது.



நாம் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நான் உங்களிடம் நேர்மையாக இருப்பேன். மக்களின் குரலைக் கேட்பேன். இந்த வெற்றி அமெரிக்காவுக்கு ஒரு புதிய விடியல்.


அமெரிக்காவின் இனவாதம் குறித்த கேள்விகளுக்கு இந்த வெற்றி ஒரு பாடம். இந்த வெற்றி நாம் உண்மையான 'யுனைடட்' ஸ்டேட்ஸ் தான் என்பதையும் நம் மக்களின் ஒற்றுமையையும் நிரூபித்துவிட்டது என்றார்.



இது தனது சொந்த ஊரான சிகாகோவில் கிராண்ட் பார்க் மைதானத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே ஒபாமா ஆற்றிய உணர்ச்சிகரமான உரை.

இந்த உரையையும், தேர்தல் முடிவையும் நானும், சுவாமியும் அலுவலக பணி முடித்துவிட்டு வந்து சீனி வீட்டில் சாயங்காலத்திலிருந்து இரவு வரை CNNலில் தொடர்ந்து இந்த அமெரிக்காவுக்கான புதிய விடியலை கண்டு/கேட்ட பல கோடி மக்களில் நாங்களும் இணைந்தோம்.

0 Comments:

Post a Comment

<< Home